
திடீர் மழை
பெய்யும்
ஒவ்வொரு முறையும்
சொல்வாய்
ஹே!
எதோ
நல்லது நடக்கப் போகிறது
சிரித்து விட்டேன்
முதல் முறை!
ஹே!
லேசா தூறுதில்ல
இப்போதே
கொடுத்த
ஷாப்பர்ஸ் ஸ்டாப் கூப்பனில்
அதிர்ஷ்டம்
எனக்கு தான்
ஹே!
அங்க உன் ஆஃபிஸ் பக்கம்
மழை எதாவது பெய்யுதா?
இல்ல...
ஒரு மொக்க ஸ்கிரிப்ட்
எக்ஸிக்யூட் பண்றேன்
வேலை செய்யுமா?
ஹே!
இப்படி
மேகமூட்டமா இருக்கே
கொஞ்சம் தூறுனா தான் என்ன!
முகவரி தேடி
படி ஏறி இறங்கிய படி நாம்
குடையேதும் இல்லை
இருவரிடமுமே!
பாரு லேசா
தூறுது!
ஸோ...
இப்போ நீ
லேட்டாக வீட்டுக்கு போனாலும்
அம்மா திட்டவே மாட்டாங்க!
நானும் என் பங்கிற்கு
என்றாவது!
உனக்கிருந்த
ஒரே
தவிப்பு
சென்னையில்
ஒரு
மழைக்காலம்!
ஆம்!
உன்
அதிர்ஷ்டம்
மழை அல்ல
திடீர் மழை மட்டுமே!
இதென்ன
சிறுபிள்ளைதனம்!
விளையாட்டிற்கு தானே
சொல்கிறாய்!
எப்போதும்
இதே பேச்சு தானா!
கேட்கவும் இல்லை
எதையும்
சொல்லவும் இல்லை
ஹே!
நாம் பேசிய
முதல் முறை
ஞாபகம் இருக்கா?
ம்...
என்றேன்
இருபதாவது முறையாக
அதை கொஞ்சம் சொல்லேன்
இக்கதையை கேட்பதில்
அப்படி என்ன உனக்கு ஆர்வம்?
தெரியவில்லை
எனக்கு!
பல முறை
யூகிக்க முயற்சித்திருக்கிறேன்
ஒரு வேளை
அன்று
மழை ஏதும் பெய்திருந்ததா
ஆர்வமாக யோசித்ததில்
அன்று அடித்த நல்ல வெயில் தான்
சட்டென நினைவில்!
ச்சே!
A1+ இரத்தம் வேண்டும்
தானம் செய்ய உங்களுக்கு விருப்பமா?
MMM செல்லமுடியுமா உடனே?
ஆஃபிஸ் இன்ட்ரானெட் பார்த்து
அவசரமாக அழைத்திருந்தாய்
நம்
முதல்
உரையாடல்
நன்றி சொல்ல
நீ தேர்ந்தெடுத்த
அடுத்த நாள்
தேனீர் இடைவெளி
அது
நம்
முதல்
சந்திப்பு
வேறு ஏதேனும்
நான் மறந்தேனா!
ச்சே...
இத்தனை முறை
உன்னிடம் போய்
கேட்டேனே!
என் சலிப்பையும்
சேர்த்து
நீயே சலித்துக் கொண்டாய்!
திடீர் மழை போல்
வேறேதேனும்
குருட்டு நம்பிக்கை உண்டோ!
இதையும்
கேட்கவில்லை
என்ன நாள் அது?
ஜுன் பதிமூன்று
கிழமை?
புதன்
நேரம்?
மதியம் இரண்டு இருக்கும்
நீ எங்கு இருந்தாய்?
மதிய உணவிற்காக
ஹோட்டலில்
நான்?
தோழியின் திருமணத்திற்காக
ஊரில்
எந்த ஊர்?
நாமக்கல்
அங்கு என்ன சிறப்பு தெரியுமா?
மேட்டூர் அணை
உன்னை போய் கேட்டேனே!
நீர்வீழ்ச்சி?
ஆ...அது ஒக்கனேக்கல்
அப்படியா! சரி நீயே சொல்லேன்
சரி போகிறது போ!
அந்த ஊரின் சிறப்பு
அங்கு
அடிக்கடி
பெய்யும்
.
.
.
.
.
திடீர்
மழையே!
அன்றே
ஆரம்பித்தது
இந்த நம்பிக்கை!
பின்
நீ பேசியது ஏதும்
சரியாக காதினில்
விழவில்லை!
நீயும்
விலகியே சென்றாய்
மரத்தடிக்கு
மேட்டூர் அணை
திறந்த உற்சாகமோ
ஒக்கனேக்கல்
நீர் வேழ்ச்சியின்
உக்கிரமமோ!
சில நிமிடங்கள்
பின்
சிலிர்த்தபடி
விரைந்தேன் நானும் மரத்தடிக்கு
இப்போதே துவங்கிய
திடீர் மழையை
உணர்ந்தவனாய்!